TN TRB முதுகலை ஆசிரியர் ஆட்சேர்ப்புக்கு தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் முதுகலை ஆசிரியர் பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட இருந்த நிலையில், அந்த ஆட்சேர்ப்பு பணிகளுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆட்சேர்ப்புக்கு தடை
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TNTRB) கீழ் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தீவிரமடைந்து வந்த கொரோனா பரவல் காரணமாக காலிப்பணியிடங்கள் எதுவும் நிரப்பபடாமல் இருந்து வந்தது.
1 முதல் 3ம் வகுப்பு வரை செப்.20ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா 2 ஆம் அலை தாக்கம் குறைந்துள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் தமிழ்நாடு உயர்கல்வித் துறையில் காலியாக இருக்கும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்புகள் சமீபத்தில் கொடுக்கப்பட்டது. அதற்கான தகுதிகள், வயது வரம்பு போன்ற விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் அகிலனாக களமிறங்கியுள்ள நடிகர் சுகேஷ் – சினிமா பயணம்!!
இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி வெளியிடப்பட்ட முதுகலை ஆசிரியர் நியமன அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து நீதிமன்றத்தின் 2019 உத்தரவுகளை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மீறியதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தவிர முதுகலை ஆசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்பும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என TRBக்கு ஒரு வார காலம் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.