1 முதல் 3ம் வகுப்பு வரை செப்.20ம் தேதி பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஹரியானா மாநிலத்தில் செப்டம்பர் 20ம் தேதி தொடங்கி 1 முதல் 3ம் வகுப்பு வரை பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகள் திறப்பு:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை இறுதி கட்டத்தை எட்டி வரும் நிலையில் மாநில வாரியாக ஊரடங்கு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இந்நிலையில் செப்டம்பர் 20 முதல் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை ஹரியானா அரசு மீண்டும் திறக்க உள்ளது. கோவிட் -19 வழிகாட்டுதல்கள் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட விதிகளை பராமரிக்க மாநில அரசு ஒரு நிலையான வழிகாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது. மேலும் வகுப்புகள் ஆன்லைனிலும் நடைபெறும். நேரடி வகுப்புகளில் பங்கேற்க விரும்புவோர் பெற்றோரிடமிருந்து ஒப்புதல் கடிதத்தை கொண்டு வர வேண்டும்.
“பாரதி கண்ணம்மா” சீரியல் அகிலனாக களமிறங்கியுள்ள நடிகர் சுகேஷ் – சினிமா பயணம்!!
நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது கட்டாயமாக இருக்காது. வகுப்புகளில் கலந்து கொள்ள எந்த மாணவருக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று மாநில அரசு பள்ளிகளை கேட்டுக் கொண்டுள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் வெப்ப பரிசோதனை மற்றும் சானிடைசர்கள் கட்டாயமாகும். ஹரியானா அரசு ஏற்கனவே 4 முதல் 12 வகுப்புகளுக்கு பள்ளிகளை திறந்துள்ளது. 4 மற்றும் 5 ஆம் வகுப்புகள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்பட்டன. 6 முதல் 12 வகுப்புகள் ஜூலை மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.
‘பிக்பாஸ் சீசன் 5’ல் களமிறங்கும் விஜே பிரியங்கா? உறுதியான தகவல்!
இதற்காக கல்வி அமைச்சர் கன்வர் பால் மாணவர்களின் பெற்றோரின் எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெறும்படி அறிவுறுத்தி உள்ளார். தவிர, நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள விரும்பாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடரலாம். இரண்டு மாணவர்களுக்கிடையே குறைந்தது ஆறு அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்று அரசு தனது வழிகாட்டுதல்களில் கூறியுள்ளது.