தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று – பள்ளிக்கு 2 நாட்கள் விடுமுறை!
கோவை மாவட்டம் அன்னுர் அருகே உள்ள தனியார் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதனால் அப்பள்ளிக்கு 2 நாட்களுக்கு பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது .
ஆசிரியருக்கு கொரோனா:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஓராண்டிற்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த ஜனவரி மாதம் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்றது பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்தால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைந்து வருவதால் மாணவர்களின் கல்வி நிலை கருதி செப்டம்பர் 1 ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று – கல்வித்துறை ஆலோசனை!
முதல் கட்டமாக 9 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கோவை மாவட்டம் அன்னுர் அருகே உள்ள ஓட்டர் பாளையம் ஊராட்சி அல்லி காரன்பாளையத்தில் தனியார் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கட்டுப்பாடுகள் – காவல்துறை எச்சரிக்கை!
50 வயதான அப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு திடீரென சளி , காய்ச்சல் ஏற்பட்டது . இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பள்ளியில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்பள்ளியில் பணியாற்றும் மற்ற ஆசிரியர்களும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டு வருகிறது.