திருசெந்தூர் கோவிலில் மீண்டும் பக்தர்களுக்கு அனுமதி – முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை!
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கோவில்களுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 10 நாட்களுக்கு பிறகு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி:
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கையாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா தலங்கள், கோவில்கள் முதலிய பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நோய் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் எருக்கலம் பூ, வேப்பங்குச்சிகள் விற்பனை அமோகம் – விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவில். கொரோனா தடுப்பு பணியாக ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் 10 நாட்களுக்கு பிறகு இன்று முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து வழிபட்டு செல்கின்றனர்.
கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதியம் & அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் தகவல்!
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறநிலைய துறை மானியக் கோரிக்கையில் சட்டசபையில் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இன்று முதல் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த கட்டணம் கிடையாது என கூறப்படுகிறது. 10 நாட்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.