ஆன்லைனில் எருக்கலம் பூ, வேப்பங்குச்சிகள் விற்பனை அமோகம் – விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்!
நாடு முழுவதும் செப்டம்பர் 10 ஆம் தேதியன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால், பூஜைக்கு தேவையான எருக்கலம் பூ, செம்மண், அடுப்புகரி உள்ளிட்ட பொருட்கள் ஆன்லைன் மூலம் விற்பனை செய்யபட்டு வருகிறது.
ஆன்லைன் விற்பனை
இந்த அதிநவீன உலகில் மக்களின் அன்றாட செயல்பாடுகள் அனைத்தும் மின்னணு சாதனங்கள் மூலம் எளிமையாக்கி விட்டது. இதற்கும் ஒரு படி மேலே போய் வீட்டு மளிகை பொருட்கள் முதல் நகைகளை வாங்குவது வரை அனைத்து சேவைகளும் ஆன்லைன் வழியே நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நமக்கு தேவையான பொருட்களை நாம் இருக்கும் இடங்களில் இருந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்தால், அவை வீடு தேடி வந்துவிடும் அளவுக்கு இன்றைய விஞ்ஞானம் வளர்ந்துள்ளது.
கைத்தறி நெசவாளர்களுக்கு 10% ஊதியம் & அகவிலைப்படி உயர்வு – அமைச்சர் தகவல்!
இந்நிலையில் வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு எருக்கலம் பூ, செம்மண், அடுப்புகரி, வரட்டி போன்ற வழிபாட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அமேசான் மற்றும் பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் தளத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் விநாயகர் பண்டிகையை கொண்டாடுவதற்கும், வெளியே நடமாடுவதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது.
SBI வங்கியின் டெபிட் கார்டு மூலம் EMI ஷாப்பிங் சேவை – முழு விவரம் இதோ!
அதனால் பலரும் பூஜைக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் எருக்கலம் பூக்கள் ஒரு பாக்கெட் ரூ.151 ரூபாய் எனவும், 10 வேப்பங்குச்சிகள், 15 ஆலங்குச்சிகள் ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர அடுப்புக்கரி, தேங்காய் சிரட்டை போன்ற பொருட்களும் ஆன்லைனில் அமோகமாக விற்பனையாகிறது.