இணைய சூதாட்டத்திற்கு தடை விதிப்பு – மாநில அரசு உத்தரவு!
கர்நாடகாவில் இணைய சூதாட்டத்தில் பண மோசடி புகார்கள் அதிகரித்து வருவதால் இணைய சூதாட்டத்தை அம்மாநில அரசு தடை விதிக்க உள்ளது. இது குறித்து செப்டம்பர் 13ம் தேதி கர்நாடக சட்டப்பேரவையில் விவாதிக்க உள்ளனர்.
இணைய சூதாட்டத்திற்கு தடை
தற்போதைய நவீன காலத்தில் ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் ரம்மி விளையட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த விளையாட்டு மூலம் பணம் வைத்து விளையாடி தங்கள் பணத்தையும் எதிர்காலத்தையும் இழக்கின்றனர். இந்தியாவில் கடந்த சில மாதங்களில் நிலவிய கொரோனா தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக ஏராளமான இளைஞர்கள் வேலையிழந்து வீடுகளில் உள்ளனர். இவர்கள் பொழுது போக்கிற்காக இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டு அதன் பிறகு இவ்விளையாட்டிற்கு அடிமையாகி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் தன்னிடம் உள்ள பணத்தை இழந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.136 குறைவு – இன்றைய நிலவரம்!
தொலைபேசியில் பணம் தருகிறோம் அதை வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுங்கள் அதிக பணத்தை வெல்லுங்கள் என்ற குறுஞ்செய்தி மொபைலுக்கு வருகிறது அதை நம்பி ஏமாந்து போய் விடுகின்றனர். இணைய வழி சூதாட்டத்திற்கு அடிமையாகி பணத்தை இழந்த பலர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற நிகழ்வுகளை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி தமிழகத்தில் பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழக தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை – பிளஸ் 2 மாணவிக்கு கொரோனா தொற்று!
அதனை தொடர்ந்து தற்போது கர்நாடகாவில் இணைய சூதாட்டத்தில் பண மோசடி புகார்கள் அதிகரித்து வருவதால் இணைய சூதாட்டத்தை சட்டம் 1963ன் படி அம்மாநில அரசு தடை விதிக்க உள்ளது. இது குறித்து சட்டமன்றத்தில் வரும் செப்டம்பர் 13 முதல் 24 வரை விவாதிக்க உள்ளனர். ஏற்கனவே கர்நாடகாவில் முன்னதாக இணைய விளையாட்டுகளுக்கு கைபேசி மற்றும் கணினிகளிலிருந்து பணம் அனுப்புவது தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகள் முழுவதும் தடை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.