தமிழக தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை – பிளஸ் 2 மாணவிக்கு கொரோனா தொற்று!
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு இன்று (செப்டம்பர் 6) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, பள்ளிகளை மீண்டும் மூடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 மாதங்களுக்கு பிற்பாடு மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள், நேரடி வகுப்புகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இதில் சில மாணவ, மாணவிகளுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்பட்ட 3 வது நாளே மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
தமிழக தொல்லியல் முதுநிலை பட்டயப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அந்த வகையில் செப்டம்பர் 3 ஆம் தேதியன்று அரியலூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடலூர் மற்றும் நெய்வேலியை சேர்ந்த பள்ளி ஆசிரியைகளுக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த வரிசையில் தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களிலும், பள்ளி மாணவர்கள் சிலருக்கு இன்று (செப்டம்பர் 6) கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.
SBI, HDFC வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – செப்.30 கடைசி நாள்!
இந்நிலையில் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை பகுதியை சேர்ந்த இரட்டை வாய்க்கால் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளி மாணவர்களை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று பாதிப்புகளால் பள்ளிகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு சிக்கல்கள் எழுந்துள்ளது. அதனால் தமிழகம் முழுவதும் பள்ளிகள் விரைவில் மூடப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.