தமிழகத்தில் இன்று மட்டும் 1,568 பேருக்கு கொரோனா உறுதி – சுகாரத்துறை அறிக்கை!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை சற்று குறைந்திருந்த நிலையில், தற்போது இன்றைய கொரோனா பதிப்பு நிலவரத்தை சுகாதாரத்துறை அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு:
தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு கடந்த மார்ச் மாதம் முதல் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழக அரசு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்று தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செப்டம்பர் 15ம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கிற்கான கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை தமிழகத்தின் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 1,568 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 26,19,511 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 34,980 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மட்டும் 1,657பேர் தொற்று பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 25,68,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுவதும்16,370 பேர் தொற்றுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இன்று மட்டும் 1,60,742 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 4,27,93,906 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 239 பேருக்கும், சென்னையில் 162 பேருக்கும், செங்கல்பட்டில் 88 பேருக்கும், ஈரோட்டில் 125 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.