டாஸ்மாக் மதுபான கடைகளில் முக்கிய எச்சரிக்கை – ஊழியர்கள் கவனத்திற்கு!
கொரோனா தாக்கத்தின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவு.
டாஸ்மாக்:
கொரோனா பெருந் தொற்று தீவிரமாக பரவி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. தமிழகத்திற்கு அதிகப்படியான வருவாய் ஈட்டி தருவதில் டாஸ்மாக் முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் தொற்று பரவும் விகிதம் படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்தியாவில் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் 54% பேர் – விபரம் வெளியீடு!
மதுக்கடைகளை அவ்வப்போது பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்வது, கடை ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கிருமி நாசினி கொண்டு தொடர்ச்சியாக கைகளை கழுவுவது, அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்வது, கடைகளின் முன்புறம் போதிய இடைவெளி விட்டு வட்ட குறியீடுகள் போட்டு வாடிக்கையாளர்களை வர வைப்பது, பொது இடங்களில் மது அருந்தாமல் பார்த்துக் கொள்வது போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது மது பிரியர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் பின்பற்றுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளது. முகக்கவசம் அணியாமல் வந்து மது வாங்கிச் செல்வதும், கடைகளில் தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்வதில்லை என்றும் புகார்கள் கூறப்படுகின்றன. கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை கடைபிடிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.