கோவை மாநகராட்சியில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
கோவை மாநகராட்சியில் அதிகரித்து வரும் கொரோனா புதிய பாதிப்புகளை கவனத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதத்தில் வார நாட்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் தற்போது கொரோனா 2 ஆம் அலை பரவல் குறைந்துள்ளது என்றாலும் சில மாவட்டங்களில் மட்டும் புதிய பாதிப்புகள் சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கொரோனா நிலவரங்களுக்கு ஏற்ப மாவட்ட நிர்வாகங்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என அரசு அனுமதி கொடுத்துள்ளது. எனினும் மாநிலம் தழுவிய பொது முடக்கமானது தற்போது செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பள்ளி & கல்லூரி அருகே போதைப்பொருள் விற்க தடைச்சட்டம் – தமிழக முதல்வர் அதிரடி நடவடிக்கை!!
இதனிடையே கொரோனா 2 ஆம் அலையால் அதிகம் பாதிக்கப்பட்ட கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டுமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அரசு விதித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளுடன் சில கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆணையர் சமீரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள உத்தரவில், ‘கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் வார இறுதி நாட்களில் கடைகளின் இயக்கம் தடை செய்யப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
அதன் கீழ் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகள் தோறும் ஜவுளி கடைகள், நகைக் கடைகள், மால்கள் மற்றும் பூங்காக்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்படுகிறது. மற்ற நாட்களிலும் அத்தியாவசிய கடைகள் தவிர பிற கடைகள் அனைத்தும் தினசரி இரவு 10 மணிக்கு முன்னாக மூடப்படிருக்க வேண்டும். மேலும் உணவகங்களை பொருத்தளவு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50% வாடிக்கையாளர்கள் திறனுடன் செயல்படலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.