பள்ளி & கல்லூரி அருகே போதைப்பொருள் விற்க தடைச்சட்டம் – தமிழக முதல்வர் அதிரடி நடவடிக்கை!!
தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனைக்கு தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
போதைப்பொருள் விற்பனைக்கு தடை :
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. அரசின் முயற்சியால் நடப்பு ஆண்டு அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளது. மேலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பிட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதால் அனைவரும் ஆல் பாஸ் செய்துள்ளனர். இதானால் கல்லூரிகளிலும் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவர்களின் கல்வி நிலையை கருத்தில் கொண்டு அதிகாரிகள் கலந்தாலோசனை மேற்கொண்டு செப்டம்பர் 1 முதல் மீண்டும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் செப் 1 முதல் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி
அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில், பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனைக்கு தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தில் குட்கா விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும் தடை செய்த குட்கா பொருட்களை விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் காவல்துறையை ஊக்குவிக்க தமிழக அரசு தயங்காது. இதுவரை 149.43 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11,247 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப்பொருள் விற்பனை செய்வோருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.