சந்தியாவின் நினைப்பில் சரவணன், பார்வதிக்கு விரைவில் நிச்சயதார்த்தம் – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில், சந்தியாவை விட்டு சரவணன் பிரிய போவதாக நினைத்து கிளம்புகிறார். அதன் பின்னர் போகிற வழியில் யாரை பார்த்தாலும் சந்தியா போலவே தெரிகிறது.
ராஜா ராணி 2:
இன்று “ராஜா ராணி 2” சீரியலில், விக்கியிடம் இருந்து பார்வதியை காப்பாற்றி வீட்டிற்கு வருகின்றனர். அப்போது சிவகாமி சந்தியாவிடம் கோவிலுக்கு போனால் பழம், தேங்காய் எதுவும் வாங்கவில்லையா என கேட்கிறார். பின்னர் சந்தியா சமாளிக்க, ஒரு வயசான அம்மா பசிக்கிது என்று கேட்டார். அவர்களுக்கு கொடுத்து விட்டோம் என சொல்கிறார். அதை சிவகாமி நம்பி விட்டார். ஆனால் அர்ச்சனா நம்பாமல் இருக்கிறார்.
“பாரதி கண்ணம்மா” முதல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
பின்னர் பார்வதி நடந்ததை நினைத்து அழுகிறார். மேலும் தனியாக நின்னு போராடி எல்லாத்தையும் பண்ணிடீங்க என நன்றி சொல்கிறார். பின்னர் சந்தியா தைரியமாக இருக்க சொல்கிறார். உன் அண்ணன் செய்ய வேண்டியதை நான் செய்திருக்கிறேன் என சொல்கிறார். பின்னர் சிவகாமி அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்க சரவணன் நாளைக்கு வந்து விடுவான் என அவர் அப்பா சொல்கிறார். பின்னர் பார்வதிக்கு நிச்சயம் செய்ய நாளை மறுநாள் வருவதாக தெரிவித்ததை சொல்கிறார்.
அதை கேட்டதும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர் செந்தில் வந்ததும் அவரிடம் விவரத்தை சொல்கிறார். சரவணன் நாளைக்கு வந்துவிடுவான் என்று சொல்ல அப்போ எதுவும் பிரச்சனை இல்லை என செந்தில் சொல்கிறார். பின்னர் சரவணன் ஆட்டோவில் வர சந்தியா ஞாபகத்தில் அனைவரும் சந்தியா போலவே தெரிகின்றனர். ஆட்டோ டிரைவர், ட்ராபிக் போலீஸ், இன்ஜினியர், டாக்டர் என அனைவரும் சந்தியா போலவே உள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இப்படி சந்தியா நினைப்புடன் இருக்கிறோம் என நினைக்க நம்ம கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை சந்தியா நம்ம விட்டு போனால் தான் சந்தோசமாக இருப்பார் என சரவணன் நினைத்து பார்க்கிறார். சிவகாமி சரவணன் வர போகிறான் என நினைத்து சந்தோசமாக இருக்கிறார். நிச்சயதார்த்ததிற்கு ஏற்பாடுகளை செய்கின்றனர். சந்தியா அனைவருக்கும் டீ கொடுக்க சரவணன் வருகிறார். அவரை பார்த்து குடும்பமே சந்தோசப்படுகிறது.
பின்னர் சந்தியா சரவணனனை பார்த்த சந்தோஷத்தில் இருக்க ஆனால் சரவணன் சந்தியாவை கண்டு கொள்ளாமல் இருக்கிறார். சரவணன் நான் சட்டை எடுத்து தரேன் என சொல்லி பேசுகிறார். பார்வதி நிச்சயம் இல்லையென்றால் ஒரு வாரம் கழித்து வந்து இருப்பேன் என நினைத்து பார்க்கிறார். பின்னர் நாளைக்கு ஒரு நாள் தான் நீங்க இங்க இருக்க போகிற கடைசி நாள் என சரவணன் நினைத்து பார்க்கிறார். பார்வதிக்கு நல்ல அண்ணன் கிடைத்து விட்டான், ஆனால் உங்க அண்ணன் செய்த தவறை நான் சரி செய்கிறேன் என சொல்கிறார். சந்தியா புரியாமல் இருக்கிறார்.