“பாரதி கண்ணம்மா” முதல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” வரை – ரசிகர்களின் டாப் கமெண்ட்ஸ்!
தமிழ் சின்னத்திரையில் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்கள் ஒளிபரப்புவதால் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோ மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ப்ரோமோக்களில் ரசிகர்களின் டாப் கமெண்ட் குறித்து இந்த பதிவில் காணலாம்.
சீரியல் ரசிகர்கள்:
தமிழ் சின்னத்திரையில் காலை முதல் இரவு வரை பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல்களில் சில சிறந்த நல்ல கருத்துக்களும் உண்டு. முன்னதாக வயதானவர்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற நிலை மாறி இளசுகளை தன் வசம் இழுக்க தேவையான காதல், காமெடி கலந்த கதைகளையும் ஒளிபரப்பி வருகின்றனர்.
சின்னத்திரையில் மீண்டும் வரும் சித்ரா – கால்ஸ் திரைப்பட உரிமையை பெற்ற பிரபல சேனல்!
இந்நிலையில் 30 நிமிட சீரியல்களை விட இன்றைய எபிசோட் குறித்த 30 வினாடி ப்ரோமோவிற்கு காத்திருக்கும் ரசிகர்கள் அதிகம். மேலும் சமூக வலைத்தளங்களில் தொலைக்காட்சி நிறுவனங்களில் பக்கத்தில் இன்றைய எபிசோட் குறித்த ப்ரோமோக்களில் ரசிகர்கள் பதிவிடும் கருத்துக்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணனுக்கு தேவையான மளிகை பொருள்களை தனம் சொன்னது போல ஜீவாவும் கதிரும் அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் அதை வைத்து சாப்பாடு செய்வது போல ப்ரோமோ தற்போது வெளியாகி உள்ளது. அதை பார்த்த ரசிகர்கள், எப்படியோ ஒரு வழியாக சாப்பாடு செஞ்சிட்டீங்க என பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இன்னைக்கு ஓகே நாளைக்கு என்ன பண்ண போறீங்க என்று கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்த அனைவரது நிலைமையும் இப்படித்தான் என்று கூறியுள்ளார். மேலும ரசிகர்கள் பலரும் கண்ணன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று கேட்டுள்ளனர்.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா தான் லட்சுமியின் அம்மா என ஒப்புக் கொண்டுள்ளார். அதன் பின்னர் பாரதி சௌந்தர்யா ஏன் உடந்தையாக இருந்தார் என கேள்வி கேட்கிறார். இப்படி ப்ரோமோ வெளியான நிலையில் அதை பார்த்த ரசிகர்கள் ஒருவர் பொய்யை மட்டுமே நம்புற இந்த நீ மத்தவங்க பொய் சொல்றாங்கன்னு சொல்லுற, அதுங்களும் முழிக்குதுங்க என கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு ரசிகர் பொய்யின் மொத்த உருவம் வெண்பாதான் அதை கண்டுபுடிங்க பாரதி என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் பாரதி இவ்ளோ பேசுறாரு ஏன் சௌந்தர்யா அம்மா அமைதியா இருக்கீங்க என்று கேட்டுள்ளார்.
TN Job “FB Group” Join Now
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில், கோபியின் அலுவலகத்திற்கு போன பாக்கியா அவரே ஆர்டர் செய்தார் என நினைப்பதாக சொல்கிறார்.அதற்கு கோபி இல்லை என சொல்கிறார். இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர், ஆபீஸ் உள்ள ஊழியர்களுக்கு தெரியுது உங்களுக்கு தெரியலயே என்று கூறியுள்ளார். மற்றொரு ரசிகர் இப்படியோ பிஸினஸ டெவலப் பண்ணுங்க நல்லாருக்கும் என்று கூறியுள்ளார்.
நாம் இருவர் நமக்கு இருவர்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில், மாயன் பெற்ற அம்மாவுடன் செல்ல சொல்கிறார்கள் ஆனால் அவர் வர மறுக்கிறார். உடனே அவரை பழி வாங்க அவரது தம்பி மாயன் மாறுகிறார். அப்படிப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர் மாயன் நடிப்பு சூப்பர் என்று கூறியுள்ளார். மாயன் எப்பவுமே நாச்சியார் பக்கம் தான் இருப்பார் என்று மற்றொரு ரசிகர் கூறியுள்ளார்.
ராஜா ராணி 2
ராஜா ராணி 2 சீரியலில் நாளைக்கு ஒரு நாள் தான் இங்கே இருக்க போற கடைசி நாள் என சரவணன் நினைக்கும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர், எப்படித்தான் நல்லா போனாலும் இவங்க சண்டை முடியவே முடியாது போலவே என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகர் பல வீடுகளில் இப்படித்தான் கணவன் மனைவி புரிதல் இல்லாமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.