டிஜிட்டல் கடன் தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் வழங்கும் நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மேலும் இந்த டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்களில் அதிக வட்டி மற்றும் மறைக்கப்பட்ட கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி:
கடன் தருவதாக கூறி சில நிறுவனங்கள் இணையதளம் மூலம் மோசடியில் ஈடுபடுகின்றனர். அங்கீகரிக்கப்படாத டிஜிட்டல் கடன் தளங்களை நம்பி சிறு, குறு வியாபார நிறுவனங்கள் ஏமாறுவது வழக்கமாக தொடர்ந்து வருகிறது. மேலும் இந்த டிஜிட்டல் கடன் தளங்கள் அதிக வட்டி கூடுதல் மறைக்கப்பட்ட கட்டணங்கள் கடனாளிகளிடம் இருந்து வசூலிக்கின்றனர் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் டிசம்பர் மாதத்திற்குள் டிஜிட்டல் ரூபாய் சோதனை – மத்திய வங்கி ஆளுநர் தகவல்!
மேலும் சட்ட ரீதியாக கடன் வழங்கும் நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பணக்கடன் சட்டம் போன்ற சட்ட ரீதியான விதிகளின் கீழ் மாநில அரசுகளால் நடத்தப்படும் நிறுவனங்களால் மட்டுமே மேற்கொள்ள முடியும். எனவே அங்கீகாரம் இல்லாத டிஜிட்டல் கடன் தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
ஆன்லைன் அல்லது மொபைல் செயலிகள் மூலம் கடன்கள் வழங்கும் நிறுவனத்தை முதலில் சரிபார்க்க வேண்டும் அவற்றின் செயல்பாடுகள் குறித்து விசாரித்த பிறகு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும். நுகர்வோர் ஒருபோதும் அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத செயலிகளில் ரிசீசி ஆவணங்களின் நகல்களை பகிரக்கூடாது என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. டிஜிட்டல் கடன் வழங்கும் தளங்கள் சம்பந்தப்பட்ட வங்கி அல்லது என்.பி.எஃப்.சி பெயரை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக வெளியிட வேண்டும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.