ஆகஸ்ட் 31க்குள் ஆப்கானை விட்டு வெளியேறுவோம் – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி உள்ளதால், அங்கிருந்து அமெரிக்க படைகளை ஆகஸ்ட் 31க்குள் வெளியேற்றுவோம் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
படைகள் வெளியேற்றம்:
ஆப்கானிஸ்தானின் காபூல் உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் தலிபான் தீவிரவாதிகள் ஆகஸ்ட் 15 அன்று கைப்பற்றியதால் அதன் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அந்த நாட்டை விட்டு தானாகவே வெளியேறி அமெரிக்காவில் குடியேற உள்ளதாக தகவல் பரவி வந்தது. மேலும் அவர் வெளியேறிய போது மக்கள் ரத்தம் சிந்துவதை தவிர்க்கவே, அதாவது போர் பதற்றத்தை தடுக்கவே நாட்டை விட்டு தாம் வெளியே செல்வதாக தம் செய்திக் குறிப்பில் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து போர் முடிவுக்கு வருவதாக தலிபான் அமைப்பினர் தெரிவித்து இருந்தனர்.
கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 26 முதல் தொடக்கம்!
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்த தூதரகம் உள்ளிட்ட முக்கிய இடங்களை அந்தந்த நாடுகள் மூடி வந்தன. இதில் மேலும் பாதுகாப்பு கருதி, பிற நாட்டை சேர்ந்த மக்கள் தனி விமானம் மூலம் தங்கள் நாடுகளுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டனர். இதனை அடுத்து அமெரிக்காவை சேர்ந்த படைகள் தங்கள் நாடுகளை விட்டு வெளியேற வேண்டும் என தலிபான்கள் நிபந்தனை விதித்தனர். இதனை அடுத்து, ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேற தாலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
தற்போது தலிபான்கள் கைக்கு ஆப்கான் மாறியதை அடுத்து இதன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச, உலக தலைவர்கள் பங்கேற்ற ஜி 7 மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்ய மற்றும் பிரான்ஸ் நாட்டு அதிபர்கள் ஆப்கானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறும் கால அளவை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இதனை ஏற்க மறுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், முடிவு செய்யப்பட்ட படி இந்த மாத இறுதியான ஆகஸ்ட் 31க்குள் ஆப்கானை விட்டு வெளியேறுவோம் என அறிவித்தார்.