கலை, அறிவியல் கல்லுாரி மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 26 முதல் தொடக்கம்!
பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர் ராஜ்குமார் அறிக்கை விடுத்துள்ளார்.
கலந்தாய்வு அறிவிப்பு:
12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் ஆல்பாஸ் என அறிவித்ததை தொடர்ந்து கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் சேர்க்கை பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை நடைபெறவுள்ளது. பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கணிதம், பி.பி.ஏ., பி.காம்., (சி.ஏ.,), பி.காம்., (பி.ஏ.,) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளடக்கியுள்ளது.
செப்.1 இரண்டு ஷிப்டுகளில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு!
இந்த பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களில் 1,712 விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை காலை, 11:00 மணிக்கு, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் வாரிசுதாரர்களுக்கு நடக்கிறது. அதனை தொடர்ந்து தொடர்ந்து, வணிகவியல் மற்றும் வணிக நிர்வாக துறைக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை எண் 001 முதல், 150 வரை உள்ளவர்களுக்கு 27ம் தேதியும் தரவரிசை எண் 151 முதல் 300 வரை உள்ளவர்களுக்கு 28ம் தேதிகளில் காலை, 10:00 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும் என கல்லூரி முதல்வர் ராஜ்குமார் கூறியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
ஆகஸ்ட் 31ம் தேதி காலை 10:00 மணிக்கு கணிதவியலுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் கலந்தாய்வு நடக்கும் என்றும் செப்டம்பர் 1ம் தேதி காலை, 10:00 மணிக்கு ஆங்கிலத்துறைக்கு விண்ணப்பித்த தரவரிசை எண், 001 முதல் 200 வரை உள்ள மாணவ, மாணவியருக்கு கலந்தாய்வு நடக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் போதிய ஆவணங்களுடன் வளாகத்திற்குள் வர வேண்டும் என்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என்று அவர் எச்சரித்துள்ளார்.