முடிவுக்கு வந்த “யாரடி நீ மோகினி” சீரியல் – நடிகர் சுர்ஜித் உருக்கமான பதிவு!!
ஜீ தமிழில் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி சீரியல் நேற்று (ஆகஸ்ட் 23) உடன் முடிவடைந்தாலும், அதில் நடித்த நடிகர்களின் நட்பு முடியாது என அதில் நடிகர் சுர்ஜித் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
யாரடி நீ மோகினி:
ஜீ தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி துவங்கிய யாரடி நீ மோகினி சீரியல் சுமார் 4 வருடங்களுக்கும் மேல் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி நேற்றுடன் நிறைவடைந்தது. அமானுஷ்யம், திகில் மற்றும் பாசம் உள்ளிட்ட பல விஷயங்களை உள்ளடக்கி ஒளிபரப்பப்பட்டதால் இந்த சீரியலுக்கு இந்த நாள் வரை ரசிகர்கள் குறையாமல் உள்ளனர். மேலும் இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நட்சத்திராவிற்கு பெரும் வரவேற்பை கொடுத்தது.
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் ஆபத்தான கர்ப்பகால போட்டோஷூட் – வைரலாகும் வீடியோ!
மேலும் சித்தி கதாபாத்திரத்தில் நடிகை பாத்திமா பாபு அசத்தலான நடிப்பை கொடுத்தார். விறுவிறுப்பும், சுவாரஸ்யமும் நிறைந்த வகையில் பல்வேறு ட்விஸ்ட்களுடன் அதிரடியாக சென்று கொண்டிருந்த யாரடி நீ மோகினி சீரியல் முடிந்துள்ளது. இதனால் சின்னத்திரை சீரியல் ரசிகர்கள் பெரும் வருத்தத்தில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று யாரடி நீ மோகினி வெற்றி விழா என்ற சிறப்பு நிகழ்ச்சியை ஜீ தமிழ் ஒளிபரப்பியது. இதில் சீரியலில் நடித்த நடிகர்கள் மற்றும் சீரியல் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் விருது வழங்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இந்த சீரியலில் கவுதம் கதாபாத்திரத்தில் நடித்த சுர்ஜித் அன்சாரி, சமூக வலைத்தளத்தில் இந்த சீரியலுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இவர் கடல் கடந்து உத்யோகத்தில் ரஞ்சித்தாகவும், குல தெய்வத்தில் அமுதன் துரைப்பாண்டியாகவும், ரோஜாவில் ராஜேஷாகவும், பைரவிவில் சிவனாகவும், விதியில் தினேஷாகவும் நடித்துள்ளார். ஆனால் இந்த சீரியல் தான் பெரும் வரவேற்பை கொடுத்தது. மேலும் சக நடிகர்களுடன் நல்ல நட்பு உள்ளதால் யாரடி நீ மோகினி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து அதில் “நாடகம் முடியலாம் நட்பு முடியாது” என்று பதிவிட்டுள்ளார்.