IND vs ENG 3வது டெஸ்ட் – இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர்? துணை கேப்டன் ரஹானே உறுதி!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் இடம்பெற தகுதியானவர் என துணை கேப்டன் ரஹானே தெரிவித்துள்ளார்.
IND vs ENG 3வது Test 2021:
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி மழையால் டிராவில் முடிந்தது. பின்னர் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
WI vs PAK 2வது டெஸ்ட்: விண்டீஸிக்கு 328 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்!
இந்த டெஸ்ட் தொடர் தொடக்கத்தில் இருந்து இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் ஒரு சேர ஒருங்கிணையவில்லை என்பது நிதர்சன உண்மையாகும். இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் பேட்டிங்கை காட்டிலும் பந்துவீச்சு தான் வலுப்பெற்றதாக அமைந்தது. இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்தை 120 ரன்களில் சுருட்டி இந்திய பவுலர்கள் பிரமிக்க வைத்தனர். இருந்த போதிலும் ஷமி, சிராஜ் போன்றோரின் பவுலிங்கில் தான் அதிகம் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
இன்று முதல் பாராலிம்பிக் போட்டிகள் தொடக்கம் – இந்திய வீரர்களுக்கு விராட் கோஹ்லி வாழ்த்து!
ஜடேஜாவின் சுழலால் எந்த தாக்கமும் ஏற்பதா நிலையில் அவருக்கு பதிலாக அஸ்வினையும், புஜாராவிற்கு பதிலாக சூரியகுமார் யாதவையும் அணியில் சேர்ப்பதற்கு வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர். முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற ஷர்துல் தாக்கூர் காயத்தினால் அவதிப்பட அவருக்கு பதிலாக இஷாந்த் சர்மா அணியில் சேர்க்கப்பட்டார். அவரும் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் ஷர்துல் தாக்கூர் உடற்தகுதியினை எட்டி விட்டதால் அவர் மூன்றாவது டெஸ்டில் களம் காணுவாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
Tokyo Paralympics 2020 India Full Schedule: இந்திய வீரர்களின் போட்டி அட்டவணை வெளியீடு!
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே, ஷர்துல் தாக்கூர் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு தகுதியானவர் என உறுதிபட கூறியுள்ளார். இந்திய அணியில் தற்போது சூழ்நிலைகளை அறிந்து பந்து வீசும் வீரர்களுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த 3வது டெஸ்ட் போட்டி நாளை துவங்க உள்ள நிலையில் இன்று மாலை இந்திய கேப்டன் விராட் கோஹ்லி செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். அணி குறித்த அறிவிப்பை அப்போது வர வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.