US ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து பெடரர் விலகல் – ரசிகர்கள் அதிர்ச்சி!
ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், தனது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள இருப்பதால் தற்போது நடைபெற இருக்கும் US ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பெடரர் விலகல்
டென்னிஸ் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் பிரபல வீரர் ரோஜர் பெடரர் US ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலக இருப்பதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது டென்னிஸ் உலகின் ஜாம்பவான்களில் ஒருவராக கருதப்படும் 40 வயதான பெடரர் இதுவரை 20 கிராண்ட்சிலாம் பட்டங்களை பெற்றுள்ளார். இது மட்டும்லாமல் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள அவர் இறுதியாக 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலியா ஓப்பன் பட்டத்தை வென்றிருந்தார். இதையடுத்து தனது அடுத்த கிராண்ட்சிலாம் பட்டத்துக்கான எதிர்பார்ப்போடு காத்திருந்த அவருக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டையுடன் ரொட்டி – விரைவில் அறிவிப்பு!
அதாவது சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியின் காலிறுதியில் அதிர்ச்சிகரமான தோல்வியை பெடரர் தழுவியுள்ளார். இந்நிலையில் தான் முழங்காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட இருப்பதால் US ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். இது குறித்து பெடரர் பேசுகையில், ‘விம்பிள்டன் போட்டிக்கு பிறகு ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
TN Job “FB Group” Join Now
இது ஒரு கஷ்டமான காலம். விம்பிள்டனில் என்னுடைய முழங்கால்களை காயமாக்கி விட்டேன். இதை சரி செய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறிவிட்டனர். இப்போது அறுவை சிகிச்சை மேற்கொள்வதனால் பல மாதங்களுக்கு என்னால் விளையாட முடியாது. இந்த சூழலில் எனக்கு ஆரோக்கியம் முக்கியம் என்பதால் இவற்றை செய்தாக வேண்டும். இதை தொடர்ந்து அடுத்த போட்டிகளில் கண்டிப்பாக கலந்து கொள்வேன்’ என தெரிவித்துள்ளார்.