தமிழக பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் முட்டையுடன் ரொட்டி – விரைவில் அறிவிப்பு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்க மதிய உணவு திட்டத்தில் வழங்கப்படும் முட்டையுடன், ரொட்டி வழங்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
மதிய உணவு:
பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுக்கவும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மாணவர்கள் ஒரு நேரமாவது உணவு உண்ண வேண்டும் என்பதற்காகவும் மதிய உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதில் மாணவர்களுக்கு முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முட்டையுடன், ரொட்டி துண்டுகள் வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 50 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவதனால், அரசு 800 கோடி ரூபாய் செலவு செய்து வருகிறது.
ஆகஸ்ட் 25ம் தேதி வங்கி தலைவர்களுடன் நிர்மலா சீதாராமன் ஆலோசனை!
கொரோனா பேரிடர் காலம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. தற்போது பள்ளிகள் இயக்கப்படாத நிலையில் மாணவர்களுக்கு அரிசி உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து குடும்ப பொருளாதார சூழல் அடிப்படையில் மாணவர்கள் பள்ளிகளில் இருந்து இடை நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
மேலும் “கொரோனா பரவலின் தாக்கத்தால் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்கள் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்நிலையில் பள்ளியில் இடைநிற்றல் கணிசமாக உயர்வதுடன், குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்கும் வகையில் சத்துணவு திட்டத்தில் முட்டையுடன் சேர்த்து, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ரொட்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாகும்” என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.