சுதந்திரதினம் பாதுகாப்பு பணியில் 3,000 காவலர்கள் – சென்னை காவல்துறை தகவல்!
நாளை சுதந்திரதின விழாவை முன்னிட்டு சென்னை முழுவதும் கூடுதலாக 3,000 காவல்துறையினர் நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு பணி:
நாளை இந்திய நாட்டின் 75 வது சுதந்திரதினம் கொண்டாடப்படுகிறது. நமது நாடு அடிமை ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டது. ஆண்டு தோறும் நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் கோடி ஏற்றம் செய்யப்படும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்த வருடம் கொரோனா பரவல் அச்சம் உள்ளதால் அரசு அதிக கட்டுப்பாடுகளுடன் கொடி ஏற்ற நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பாக்கியலட்சுமி ஜெனியின் வாழ்க்கை பயணம் – சீரியல் நடிகையாக மாறிய கதை!
சென்னை காவல்துறையினர் அதிகாரபூர்வ செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவாலின் உத்தரவின் பேரில், நகரில் உள்ள அனைத்து உயர்க்காவல் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 3,000 காவல் துறையினர் சிறப்பு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
TN Job “FB Group” Join Now
சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் முக ஸ்டாலின் தேசியக்கொடியை ஏற்றி சுதந்திரதின விழா பேருரையாற்றுகிறார். இதனால் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், நகரின் முக்கிய பகுதிகளான விமானநிலையம், இரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் கூடுதலாக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளனர். காவல்துறையினர் நகர் முழுவதும் தீவிர ரோந்து பணிகள் மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.