பாக்கியலட்சுமி ஜெனியின் வாழ்க்கை பயணம் – சீரியல் நடிகையாக மாறிய கதை!
பாக்கியலட்சுமி சீரியலில் ஜெனி கதாபாத்திரத்தில் நடைக்கும் திவ்யா கணேஷ் அவரின் வாழ்க்கை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
திவ்யா கணேஷ்:
தற்போது விஜய் டிவியின் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் பாக்கியலட்சுமியின் மருமகளாக ஜெனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் திவ்யா கணேஷ். இவர் இதற்கு முன்னர் பல சீரியலில் நடித்திருந்தாலும், ஜெனி கதாபாத்திரத்தின் மூலமே அதிக ரசிகர்களை பெற்றுள்ளார். திவ்யா ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். தான் ஒரு ஆர்ஜே ஆக வேண்டும் என்ற கனவோடு சென்னை வந்துள்ளார்.
மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் இயங்கும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இங்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே, சில ஆல்பங்களில் நடித்துள்ளார். அதன் மூலம் பல சின்ன சின்ன வாய்ப்புகள் அவர்க்கு கிடைத்துள்ளது. இதனால் கலையின் மீது ஆர்வம் அவருக்கு அதிகரித்துள்ளது. முதன்முதலாக புதுமணம் என்ற சீரியலில் வாய்ப்பு வந்துள்ளது. தற்போது 26 வயதாகவும் திவ்யா, ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு சீரியலில் வில்லி பாத்திரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். அதன்பிறகு, சன் டிவியில், சுமங்கலி, கேளடி கண்மணி போன்ற தொடரிலும் நடித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
சீரியல் மட்டுமின்றி அடங்காதே, கண்ணாடி போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அதிலும், இந்தியன் 2 ல் தற்போது ஒரு வேடத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்ட்டிவாக பல பதிவுகளையும் இட்டு வருகிறார். திவ்யா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார். இதனால் அவருக்கு அதிக பாலோயர்கள் உள்ளனர். இவரை கிராமத்தில் ஒரு நாள் என்ற ஒரு ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டவர். இவர் பல தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும், தான் தற்போது நடித்து வரும் பாக்கியலட்சுமி தொடரின் ஜெனி கதாபாத்திரம் தான் அதிக புகழை பெற்று தந்ததாக நினைக்கிறார்.