பிரபல விஜய் டிவி சீரியலில் இருந்து விலகும் ரக்ஷிதா? அவரே சொன்ன தகவல்!
விஜய் டிவி சரவணன் மீனாட்சி தொடர் மூலமாக அறிமுகமான ரக்ஷிதா மகாலட்சுமி தற்போது பிரபலமாக ஓடி கொண்டிருக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து விலகுகிறார் என தகவல்கள் வெளியானது. தற்போது அது குறித்த விளக்கத்தை அவரே அளித்துள்ளார்.
நாம் இருவர் நமக்கு இருவர்:
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களுள் ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலும் ஒன்று. கடந்த 2 வாரங்களாக பலவித திருப்பங்களுடன், திரில்லர் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. சில வாரங்களாக முத்துராசை கொலை செய்தது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் போலீசாரின் விசாரணை படி அவரை கொலை செய்தது காயத்ரி தான் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
IPL அப்டேட் – துபாய் பறந்தது தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
இப்படி திகிலூட்டும் கதைக்களத்துடன் இருக்கும் இந்த சீரியலில் நடிக்கும் விஜய் டிவி சரவணன் மீனாட்சி புகழ் ‘ரச்சிதா மகாலட்சுமி’ தற்போது விலக உள்ளதாக தகவல் வெளிவந்தது. இது குறித்து அவரிடம் சமூக வலைத்தளங்களில் பலர் கேள்வி எழுப்பினர். தற்போது அவர் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில் ஓஹோ இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. Chill பண்ணுங்க. எது நடந்தாலும் அது நல்லதுக்குத்தான் என்று பதிலளித்திருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
அவருக்கு ஏற்கனவே கன்னடத்தில் பெரிய நடிகரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரக்ஷிதாவின் இந்த பதில் ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ரஷிதாவிற்கு முன்னர் இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ரக்ஷா, ரேஷ்மி தான் நடித்து வந்தனர். ஆனால், இவர்கள் இருவருமே இந்த தொடரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர். கொரோனா காரணமாக வீட்டில் ஷூட்டிங் போக அனுமதிக்கவில்லை என்று ரக்ஷா விளக்கமளித்துள்ளார்.