IPL அப்டேட் – துபாய் பறந்தது தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெற இருப்பதால் சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டது தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
இளைஞர்களிடையே கிரிக்கெட் மோகம் என்றும் குறையாத ஒன்று. இந்த ஆண்டு கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். அதனை அடுத்து விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொண்ட தல தோனி, அடுத்ததாக தளபதி விஜய் அவர்களை நேரில் சந்தித்து பேசிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
‘இது’ நடந்தால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில முதல்வர்!
இதனை தொடர்ந்து தல தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துபாய் புறப்பட்டு சென்றது. அமீரகத்தில் வரும் செப்டம்பர் 19ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. நடந்து முடிந்த போட்டிகளில் புள்ளிகளின் அடிப்படையில் டெல்லி, சென்னை, பெங்களூர் மற்றும் மும்பை அணிகள் முதல் நான்கு இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
போட்டி தொடங்கும் முன்னதாக வீரர்களுக்கு கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுதல் மற்றும் தனிமைப்படுத்துதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமீரகத்திற்கு முன்னதாகவே சென்று பயிற்சியில் ஈடுபடுகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லப்போவது யார்? என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது.