கடைகள், வங்கிகளில் நுழைய கொரோனா தடுப்பூசி கட்டாயம் – கேரளாவில் தொடரும் கட்டுப்பாடுகள்!
கேரள மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால் அங்கு கடைகள், வங்கிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், மாநிலம் முழுவதும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டுப்பாடுகள்:
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பின் 2ம் அலை குறைந்து மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் தொடர்ந்து கொரோனா தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் தொற்று பாதிப்பு பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதனால் மத்திய அரசு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ஆறு பேர் கொண்ட குழுவை கேரளாவுக்கு அனுப்பியுள்ளது. மாநில அரசின் முயற்சிகளுக்கு உதவும் வகையில் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
BSNL வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – அசத்தலான புதிய திட்டங்கள்!
இந்நிலையில் நேற்று மட்டும் 23,000 பேருக்கு மாநிலத்தில் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக கேரள அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையும், கடைகள், சந்தைகள், வங்கிகள், தொழிற்சாலைகள், சுற்றுலா தலங்கள் அனைத்தும் திங்கள் முதல் சனிக்கிழமை வரையும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அனைத்து இடங்களிலும் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் அல்லது 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், அனைத்து இடங்களும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையும் மட்டுமே திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்று இரவு 12 மணி முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 8ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.