கார்த்தி & வசுந்தரா திருமணத்தை மறுத்து விடும் கோதை – இன்றைய “தமிழும் சரஸ்வதியும்” எபிசோட்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” தொடரில் இன்று காவியா மற்றும் சரஸ்வதி இருவரும் சேர்ந்து பாடங்களை படிக்கின்றனர். இதனால் மகிழ்ச்சி அடையும் லிங்கம் இருவரையும் பாராட்டுகிறார். கோதை கார்த்தி மற்றும் வசுந்தரா இருவரது திருமணம் நடைபெறாது என்று கூறி விடுகிறார்.
“தமிழும் சரஸ்வதியும்” சீரியல்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் இன்று சரஸ்வதிக்கு காவியா பாடங்களை நடத்துகிறார். இதனால் நன்றாக சரஸ்வதி படிக்கிறார். இதனை பார்க்கும் அவரது பாட்டி மற்றும் அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைந்து விடுகின்றனர். தமிழ் வீட்டில் கோதை மற்றும் அனைவரும் வீட்டிற்கு வந்து விடுகின்றனர். கோதையிடம் அனைவரும் திருமணம் குறித்து பேசுகின்றனர். அப்போது கோதை அவர்கள் பெரிய இடமாக இருப்பதாகவும், அதனால் வேண்டாம் என்று கூறி விட வேண்டும் என்று தனது கணவரிடம் கூறுகிறார்.
‘பாரதி கண்ணம்மா’ வெண்பாவின் கர்ப்பகால வைரல் போட்டோஷூட் – ரசிகர்கள் வாழ்த்து!
இதனால் கார்த்தி மற்றும் தமிழ் இருவரும் அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர். பின்னர், கோதையை அவரது கணவர் சமாதானம் செய்கிறார். கார்த்திக்கு கூட அந்த பெண் மேல் விருப்பம் இருப்பதாக கூறுகிறார். ஆனால், கோதை திட்டவட்டமாக அந்த சம்பந்தம் வேண்டாம் என்று மறுத்து விடுகிறார். பின்னர், வேறு வழி இல்லாமல் அவரது கணவர் சந்திரகலாவிற்கு போன் செய்து இந்த திருமணம் நடைபெறாது என்று கூறி விடுகிறார். இதனால் சந்திரகலா உச்சகட்ட கோபம் அடைந்து விடுகிறார். இதனை வசுந்தராவிடம் தெரிவித்ததும், அவர் அழுகிறார். தான் திருமணம் செய்து கொண்டால் கார்த்தியை தான் செய்து கொள்வேன் என்று கூறுகிறார். எப்படியேனும் இந்த திருமணத்தை தான் நடத்தி காட்டுவேன் என்று சந்திரகலா தனது மகளுக்கு வாக்கு கொடுக்கிறார்.
TN Job “FB Group” Join Now
சரஸ்வதி வீட்டில் தனது தந்தை கூறும் பாடங்களை சரஸ்வதி அவரிடம் எழுதி காட்டுகிறார். முன்பை விட நன்றாக படித்து எழுதியதாக அவரது தந்தை காவியா மற்றும் சரஸ்வதி இருவரையும் பாராட்டுகிறார். இந்த முறை சரஸ்வதி கண்டிப்பாக தேர்வில் பாஸ் ஆகி விடுவார் என்றும் கூறி விட்டு செல்கிறார். இதனால் வீட்டினர் அனைவரும் சரஸ்வதியை பாராட்டுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.