தமிழகத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை – ஆகஸ்ட் 15 ல் அறிவிப்பு?
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளில் ஒன்றான குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று அறிவிப்புகள் வெளியிடப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளது.
மாத உதவித்தொகை
தமிழகத்தில் தற்பொழுது ஆட்சி அமைத்திருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் தலைமயிலான திமுக கட்சி, கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குவதாக, குறிப்பாக பெண்களுக்கு வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து ஆட்சியில் அமர்ந்த புதிய அரசு, சாதாரண கட்டணமுள்ள நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தியது.
TNPSC Group 1 Mains 69 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – கோரிக்கை!
இதையடுத்து குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று கொடுக்கப்பட்ட அறிவிப்பு எப்போது செயல்படுத்தப்படும் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவித்தபடி, அரசு அதை நிறைவேற்றவில்லை என்றும் பலரது தரப்பில் இருந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இருப்பினும் கொரோனா 2 ஆம் பேரலை சிகிச்சைக்காக பெருமளவு நிதி செலவிடப்பட்டதால், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தாமதம் ஆகுவதாக அரசு தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டிந்தது.
சந்தியா, சரவணனுக்கு இடையே உள்ள பிரச்சனை பற்றி பேசும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
இந்நிலையில் தான் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்புகள் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி, சுதந்திர தினத்தன்று அறிவிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது நகர்ப்புறங்களில் நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தல் காரணமாக அரசு இந்த முடிவுகளை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.