TNPSC Group 1 Mains 69 காலிப்பணியிடங்களுக்கான தேர்வு – கோரிக்கை!
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்பட வேண்டிய Group 1 Mains தேர்வுகள் கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அதற்கான அறிவிப்பை விரைந்து வெளியிட வேண்டும் என தேர்வர்கள் எதிர்பார்ப்பதாக தெரிவித்து உள்ளனர்.
TNPSC தேர்வு:
தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவலால் தினசரி 35 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. இதனை கட்டுப்படுத்த அரசு சார்பில் கடந்த மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட போட்டித் தேர்வுகள் நடத்துவதிலும் சிக்கல்கள் ஏற்பட்டது. எனவே அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 3ம் தேதி TNPSC சார்பில் நடத்தப்பட்ட குரூப் 1 Prelims தேர்வுக்கான முடிவுகள் பிப்ரவரி 9ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வு கடந்த வருடமே நடைபெற இருந்த நிலையில் கொரோனா பரவலால் 1 வருடம் தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.
Tokyo Olympics ஈட்டி எறிதல் : தங்கம் வெல்வாரா நீரஜ் சோப்ரா? இறுதி சுற்றுக்கு தகுதி!
இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு Mains தேர்வு 28.05.2021, 29.05.2021 மற்றும் 30.05.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு மொத்தம் 69 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளின் காரணமாக இத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக TNPSC சார்பில் அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது.
சந்தியா, சரவணனுக்கு இடையே உள்ள பிரச்சனை பற்றி பேசும் சிவகாமி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!
இதில் அரசு வேலைவாய்ப்பு சம்மந்தப்பட்ட போட்டித் தேர்வுகளை மாவட்ட ஆட்சியர்களின் அனுமதி பெற்று நடத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. இதனையடுத்து தேர்வுகள் TNPSC ஆணையத்திற்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அதில் கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்ட TNPSC குரூப் 1 Mains தேர்வுகளை விரைந்து நடத்துவது தொடர்பாக அறிவிப்பினை வெளியிட வேண்டும் என கோரி உள்ளனர். ஏற்கனவே TANGEDCO சார்பில் நடத்தப்பட வேண்டிய பல்வேறு தேர்வுகள் கிடப்பில் போடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.