‘அன்னை தமிழில் அர்ச்சனை’ அறிவிப்பு பலகை – முதல்வர் வெளியீடு!
தமிழகத்தில் உள்ள கோயில்களில் இனி தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்றும், அது குறித்த அறிவிப்பு பலகை கோயில்களில் முன்னால் வைக்கப்படும் என்றும் முன்னதாக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்தார். அதற்கான அறிவிப்பு பலகையை முதல்வர் இன்று வெளியிட்டார்.
தமிழில் அர்ச்சனை:
பொதுவாக இந்து மத கோவில்களில் கடவுள்களுக்கு சம்ஸ்கிருத மொழியில் தான் அர்ச்சனை செய்யப்படுகிறது. ஆதிமொழியான தமிழில் தான் கோவில்களில் அர்ச்சனை செய்யப்பட வேண்டும் என்று பல ஆண்டுகளாக தமிழகத்தில் கோரிக்கைகள் இருந்து வந்தது. இருப்பினும் பல தரப்புகளில் இருந்தும் இந்த கருத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் பல சர்ச்சைகள் எழுந்து வந்தது.
3 வது அலையை சந்திக்க தயார் நிலையில் தமிழகம் – சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு!
இந்நிலையில், அறநிலையத்துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு அவர்கள் தமிழக அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இனி தமிழில் தான் அர்ச்சனை செய்யப்படும். தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்ற அறிவிப்பு பலகை கோவில்களில் வைக்கப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகரின் பெயர், கைபேசி எண் போன்றவையும் அறிவிப்பு பலகையில் இடம்பெறும் என்றும் ஜூன் மாதத்தில் அறிவித்தார்.
TN Job “FB Group” Join Now
தற்போது, முதற்கட்டமாக 47 பெரிய கோவில்களில் தமிழில் அர்ச்சனை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்கும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்துள்ளார். தேர்வு செய்யப்பட்டுள்ள கோயில்களில் ‘அன்னை தமிழில் அர்ச்சனை’ என விளம்பரப் பலகைகள் வைக்க இருக்கிறோம் என்றும் தெரிவித்திருந்தார். முதற்கட்டமாக வரும் வாரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழில் அர்ச்சனை தொடங்கப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பு பலகையை இன்று முதல்வர் வெளியிட்டுள்ளார். தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர் அந்த அர்ச்சகரை தொடர்பு கொண்டு தமிழில் அர்ச்சனை செய்து வழிபடலாம் என்று தெரிவித்தார்.