ATM பரிவர்த்தனை கட்டணங்கள் அதிகரிப்பு அமல் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்தியாவில் ATM பரிவர்த்தனை கட்டணங்கள் இன்று (ஆகஸ்ட் 1) முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் புதிய கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
ATM கட்டணங்கள்:
ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவை அடுத்து, வங்கிகள் முழுவதும் ஏடிஎம் கட்டணங்கள் ஆகஸ்ட் 1 ஞாயிற்றுக்கிழமை முதல் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த நாளிலிருந்து, ஏடிஎம் இயந்திரத்தில் ஒவ்வொரு பரிவர்த்தனைக்குப் பிறகும் வங்கிகள் வசூலிக்கும் பரிமாற்றக் கட்டணம் ரூ.2 ஆக உயரும் என்று ஜூன் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பரிமாற்ற பரிவர்த்தனை கட்டணம் இப்போது ரூ.15 லிருந்து ரூ.17 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு, கட்டணம் ரூ.5 இலிருந்து ரூ.6 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை!
வாடிக்கையாளர் தங்கள் வங்கியின் கிளையால் வழங்கப்பட்ட ஏடிஎம் கார்டை வேறொரு வங்கியின் இயந்திரத்தில் பயன்படுத்தும் போது இண்டர்சேஞ்ச் ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இருப்பினும் வங்கி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு மாதமும் மூன்று முதல் ஐந்து இலவச பரிவர்த்தனைகளை தங்கள் கிளை ஏடிஎம்களில் இருந்து பெற தகுதியுடையவர்கள். வாடிக்கையாளர்கள் மற்ற வங்கிகளின் மெட்ரோ நகர ஏடிஎம்களிலிருந்து இருந்தும் மூன்று மற்றும் மெட்ரோ அல்லாத நகரங்களில் ஐந்து முறை இலவசமாக பணம் எடுக்கலாம்.
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஆகஸ்ட் மாத சம்பளத்தில் DA உயர்வு வழங்கல்!
ஏடிஎம் பரிமாற்ற பரிவர்த்தனை கட்டணம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த ஏடிஎம் பரிவர்த்தனை மாற்றங்களை மாற்றியமைத்து ஆர்பிஐ உத்தரவு பிறப்பித்தது. ஜூன் 2019 இல் ஆர்பிஐ அமைத்த நிதி குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாகி தலைமையில் செயல்படும் குழு, ஏடிஎம் கட்டணங்கள் மற்றும் கட்டணங்களின் முழு வரம்பையும் மதிப்பாய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.