அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – ஆகஸ்ட் மாத சம்பளத்தில் DA உயர்வு வழங்கல்!
மத்திய அரசு அதன் ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதம் உயர்த்தி உள்ள நிலையில், மாநில அரசுகளும் அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் குஜராத் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளத்தில் DA உயர்வை வழங்குவதாக அறிவித்துள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூன் மாதம் முதல் 28 சதவீத அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து குஜராத் மாநில அரசு தனது 9.61 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஆகஸ்ட் மாத சம்பளத்தில் மூன்று மாத அகவிலைப்படி நிலுவையை (டிஏ) வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்காக சுமார் 464 கோடி ரூபாய் செலவாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இன்று முதல் செப்டம்பர் 1 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசின் வழிகாட்டுதல்கள்!
ஜூலை 1, 2019 முதல் 5% டிஏ தனது ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்குவதாக குஜராத் அரசாங்கம் முன்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஜூலை 2019 முதல் டிசம்பர் 2019 வரை ஆறு மாதங்களுக்கான டிஏ வித்தியாச தொகையை வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆரம்பத்தில் அது ஜூலை 2019 முதல் செப்டம்பர் 2019 வரையிலான மூன்று மாதங்களுக்கான வித்தியாச தொகையை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு அரசுப்பணிகளில் முன்னுரிமை!
அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2019 வரை மூன்று மாதங்களுக்கான நிலுவைத் தொகையை அரசு ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் இந்த மூன்று மாத நிலுவைத் தொகை ஆகஸ்ட் மாத சம்பளத்துடன் ஊழியர்களுக்கு/ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் என மாநில அரசின் தெரிவிக்கப்பட்டு உள்ளது.