செழியனிடம் குழந்தை பற்றி கேட்கும் ஜெனி, கண்டபடி திட்டும் செழியன் – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று ராதிகாவை பார்க்க கோபி செல்கிறார். பின்னர் வீட்டிற்கு வரும் சொந்தக்காரர் ஒருவர் ஜெனியிடம் விசேஷம் எதுவும் இல்லையா என்று கேட்கிறார். இதனால் ஜெனி வருத்தமடைகிறார். செழியனிடம் இது குறித்து சொல்ல செழியன் எரிச்சலுடன் ஜெனியை திட்டுகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா, மயூரா இல்லாத நேரத்தில் கோபி வருவதால் அக்கம்பக்கம் இருப்பவர்கள் தப்பாக பேசுவதாக கூறுகிறார். உனக்கு எதாவது கஷ்டம் வந்தால் நான் தான் வருவேன் அக்கம்பக்கம் யாரும் வரமாட்டாங்க அவங்கள நீ எதுவும் கண்டுக்காத என்று கோபி கூறுகிறார். பாக்கியா மயூராவிற்கு ஸ்னாக்ஸ் எடுத்து கொடுக்க அம்மாவின் நண்பன் ஒருவர் வீட்டிற்கு வருவார். அதுனால பக்கத்து வீட்டில் பசங்க யாரும் என்னுடன் சேரமாட்டாங்க என்று அவர் சொல்லுகிறார்.
நீ அம்மாவை நம்பனும், உனக்கு நல்லது இல்லாத எதையும் அம்மா செய்யமாட்டாங்க என்று சொல்கிறார். பிறகு பாக்கியா மயூராவிற்கு சாப்பிட செய்து கொடுக்கிறார். பின்னர் வீட்டிற்கு சொந்தக்காரர் ஒருவர் வர ஜெனியிடம் எதுவும் விசேஷம் இல்லையா என்று கேட்கிறார். தீபாவளி வர இன்னும் நாள் இருக்கே என்ன கேக்குறீங்க என்று ஜெனி புரியாமல் இருக்க நீ புள்ள பெத்துக்கலையானு கேக்குறாங்க என்று செல்வி சொல்கிறார்.
ஜெனி என்ன சொல்வதென்று தெரியாமல் இருக்கிறார். பாட்டியும் அடிக்கடி ஜெனியிடம் இதை பற்றி கேட்பதாக கூறுகிறார். இதனால் ஜெனி வருத்தமடைந்த செழியனிடம் குழந்தை பற்றி கேட்கிறார். எனக்கு 24 வயசு தான் ஆகுது என் நண்பர்கள் எல்லாரும் ஜாலியா இருக்காங்க ஆனா நான் மட்டும் கல்யாணம் பண்ணி கஷ்டப்படுகிறேன் என்று ஜெனியை திட்டி விடுகிறார். மற்றொரு பக்கம் அமிர்தா குடும்பத்துடன் எழில் நெருக்கமாக பழகி வருகிறார். அனைவரும் அமர்ந்து சாப்பிடும் போது இனியா மார்க் சீட் காட்டுகிறார். அதில் நல்ல மதிப்பெண் பெற்றதற்கு கோபி பாராட்டு தெரிவிக்கிறார். பின்னர் ஜெனி கொஞ்ச நாள் நான் என் அம்மா வீட்டிற்கு சென்று வருகிறேன் என அனைவரிடமும் தெரிவிக்கிறார். கோபி போக சரி என்று சொல்ல செழியன் வர மறுக்கிறான். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!