கண்ணனை அடிக்கும் மூர்த்தி, வீட்டை விட்டு வெளியே வரும் ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று கண்ணன் பணம் திருடியதை தனம் மூர்த்தியிடம் சொல்ல மூர்த்தி கண்ணனை அடித்துவிடுகிறார். கண்ணன் அழுதுகொண்டே வெளியே செல்ல ஐஸ்வர்யா கண்ணனை பார்க்க வீட்டிற்கு தெரியாமல் வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணன் பணத்தை திருடியதை தனம் மூர்த்தியிடம் சொல்லி விடுகிறார். அதுமட்டுமில்லாமல் கதிர் முல்லை அதனை மறைத்து விட்டதை சொல்லுகிறார். அதனை கேட்டு மூர்த்தி மிகுந்த கோபமடைந்து கண்ணனை அடிக்கிறார். எங்க இருந்து இந்த பழக்கம் வந்தது என்று பயங்கரமாக அடிக்கிறார். கதிரை பார்த்து நீங்களும் சொல்லாமல் இருந்திருக்கீங்க என்று சொல்கிறார்.
கண்ணன் அழுது கொண்டே வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். ஐஸ்வர்யா கண்ணனிடம் பேச முடியாமல் அடுத்து என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கே அவரின் சித்தி வர இன்னும் கிளம்பவில்லையா என்று கேட்டு ஐஸ்வர்யாவை திட்டுகிறார். மேலும் பிரசாந்தும் வந்து கண்ணனிடம் பேச கூடாது என எச்சரிக்கிறார். அப்போது கண்ணன் வீட்டிற்குள் ஐஸ்வர்யா பற்றி சொல்லிடலாம் என்று செல்ல யாரும் அவனிடம் பேசவே இல்லை.
எனவே மீண்டும் அழுதுகொண்டே செல்கிறார். ஐஸ்வர்யா மதுரை போறேன் எதாவது பண்ணு என்று சொன்னதை நினைத்து எதுவும் செய்ய முடியததை நினைத்து வருத்தப்படுகிறேன். மல்லியும், பிரசாந்தும் தனது அம்மாவை பார்த்துவிட்டு வருவதாக கிளம்புகின்றனர். ஐஸ்வர்யாவை கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு பிரசாந்த் கூறுகிறார். அதனை மறைந்து நின்று ஐஸ்வர்யா கேட்க, ஐஸ்வர்யாவின் சித்தி போனில் சரியாக கேட்கவில்லை என வெளியே செல்கிறார். உடனே ஐஸ்வர்யா யாருக்கும் தெரியாமல் புறப்படுகிறார்.
தமிழகத்தில் காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு – தமிழக டிஜிபி உத்தரவு!
கண்ணன் என்ன செய்வது என்று தெரியாமல் நடந்து வர ஐஸ்வர்யா எதிரே வருகிறார். அப்போது நான் வீட்டில் சொல்ல எவ்வளவோ முயற்சி செய்தேன் ஆனால் என்னை அடித்து அனுப்பிட்டார்கள் என தெரிவித்து வருத்தப்படுகிறார். அதான் நான் வீட்டில் இருந்து யாருக்கும் தெரியாமல் வந்துவிட்டேன் என்று ஐஸ்வர்யா சொல்ல கண்ணன் அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!