கண்ணம்மாவை பிரிய முடியாமல் காய்ச்சல் வந்து தவிக்கும் ஹேமா – பாரதியின் முடிவு என்ன?
விஜய் தொலைக்காட்சியில் பல வித திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் சந்தித்து பேசுகின்றனர். பாரதி தானும், ஹேமாவும் அமெரிக்கா போக இருப்பதை பற்றி கூறுகிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி லட்சுமியை வீட்டில் கொண்டு போய் விட காரில் கிளம்புகிறார். அப்போது பாரதி சமையல் அம்மாவை லட்சுமிக்கு நன்றாக தெரியுமா என்று கேட்கிறார். அதற்கு லட்சுமி சமையல் அம்மா தனது வீட்டிற்கு அருகில் தான் வசிப்பதாகவும், அதனால் நல்ல பழக்கம் என்று கூறி விடுகிறார். அப்போது அவர்களது கார் ஓடாமல் நின்று விடுகிறது. இதனால் லட்சுமி தானே வீட்டிற்கு நடந்து சென்று விடுகிறேன் என்று கூறுகிறார். பாரதி தானே சென்று விடுவதாக கூறுகிறார்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்போது என்று ஆட்டோக்காரர் குமார் வந்து விடுவதால் லட்சுமி அவருடன் சென்று விடுகிறார். லட்சுமி சென்றதும் பாரதி காரில் ஏற்பட்டிருக்கும் கோளாறை சரி செய்கிறார். அப்போது எதிரே கண்ணம்மா வருகிறார். அவரிடம் பாரதி, தானும் ஹேமாவும் அமெரிக்கா செல்ல இருப்பது பற்றி கூறுகிறார். கூடுதலாக, இனி தாங்கள் யாரும் உன் கண்ணில் விழிக்க மாட்டோம் என்றும் கூறுகிறார்.
TN Job “FB Group” Join Now
இதனால் எரிச்சல் அடையும் கண்ணம்மா பாரதி தான் தானாக வந்து இதனை பற்றி கூறுவதாகவும், தான் பாரதியை பற்றியோ அல்லது ஹேமாவை பற்றியோ கவலைப்படவில்லை என்றும் கூறுகிறார். பின், கோபத்துடன் அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார். அதன்பின் வீட்டிற்கு வரும் பாரதி, சௌந்தர்யா மற்றும் வேணுவிடம் தான் கண்ணம்மாவிடம் பேசியதை பற்றி கூறுகிறார். இதனை கேட்டு இருவரும் கவலை அடைகின்றனர். இப்படியாக இருக்க, ஹேமாவிற்கு காய்ச்சல் அதிகமாக இருக்கிறது. இதனை அறிந்து குடும்பத்தினர் அனைவரும் பதட்டம் அடைந்து விடுகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.