‘ஸ்கூட்டி ஓட்ட கற்றுக் கொள்ளும் பாக்கியா, பார்ட்டிக்கு போகும் கோபி’ – இன்றைய எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியா ஸ்கூட்டி ஓட்ட கற்றுக் கொள்கிறார். பின், வீட்டிற்கு வந்து மசாலா தயாரிக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார். பின், கோபியின் நண்பர் ஒருவர் போன் செய்து வீட்டில் பார்ட்டி ஒன்றினை ஏற்பாடு செய்திருப்பதாக கூறுகிறார்.
பாக்கியலட்சுமி எபிசோட்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்று பாக்கியா டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்ததை அடுத்து வண்டி ஓட்ட கற்றுக் கொள்கிறார். ஆரம்பத்தில் தவறுதலாக பாக்கியா வண்டியினை ஓட்டுகிறார். பின், ஒரு அளவிற்கு நன்றாக ஓட்ட கற்றுக் கொள்கிறார். இதனால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு செல்கிறார். அப்போது அவரது மாமியார் தாமதமாக வருவதற்கான காரணத்தை கேட்கிறார்.
சபரிமலை ஐயப்பன் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூலை 16 ல் நடை திறப்பு!
முதலில் பதில் சொல்ல விழிக்கும் பாக்கியா ஒரு மாதிரியாக சமாளித்து பதில் சொல்லுகிறார். பின், தனது மசாலா பிசினஸ் பணிகளை செய்ய சென்று விடுகிறார். அப்போது செல்விக்கு என்று தான் வைத்த புது சேலை ஒன்றை கொடுக்கிறார். இதனால் செல்வி சந்தோசம் அடைந்து விடுகிறார். புது சேலை குறித்த காரணம் கேட்கும் போது வீட்டில் உள்ள அனைவருக்கும் டிரஸ் வாங்கும் போது செல்விக்கும் சேர்த்து எடுத்ததாக கூறுகிறார், பாக்கியா. பின், ஆன்லைன் மூலமாக மசாலாவை விற்றதால் பாக்கியாவிற்கு 14 ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது. இதனால் பாக்கியா கூடுதல் மகிழ்ச்சி அடைந்து விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
பின், வீட்டில் அனைவரிடமும் பேசிக் கொண்டு இருக்கும் போது, பாக்கியா தான் புதிய வகையான இறால் ஊறுகாய் செய்ய இருப்பதாக கூறுகிறார். அதற்கான ரெசிபியை தனம் தனக்கு சொல்லி கொடுத்ததாகவும் அவர் தெரிவிக்கிறார். இதனை வீட்டில் உள்ளவர்கள் ஆதரிக்கின்றனர். அப்போது கோபியின் நண்பர் ஒருவர் போன் செய்து தனது மகன் எக்ஸாமில் பாஸ் செய்து விட்டதாகவும் அதனை கொண்டாடுவதற்காக ஒரு சின்ன நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருப்பதாகவும் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைந்து விடுகிறது.