தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி – இன்று முதல் தொடக்கம்!
தமிழகத்தில் இன்று (ஜூலை 3) முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசி:
தமிழகத்தில் கடந்த ஜனவரி 16, 2021 முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி அவசர கால பயன்பாட்டிற்காக மத்திய அரசு அனுமதி வழங்கிய கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்படுகிறது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளிகள், பின் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் என பல கட்டங்களாக தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு!
தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வர தொடங்கியதிற்கு முக்கிய காரணம் தடுப்பூசி தான் என்று கூறப்பட்டு வருகிறது. மேலும் மாநிலத்தில் மக்கள் தற்போது மிக ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர், இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்களை அரசு மறக்கவில்லை.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தில் கொரோனா மரணங்களை குறைத்து காட்டுவதாக குற்றம் சாட்டுவது தவறு. மேலும் பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்று (ஜூலை 3) முதல் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை 5 காலை 6 மணி முதல் முடிவுக்கு வரவிருந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை வரும் ஜூலை 12 வரை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.