தமிழக அரசின் ரேஷன் அட்டை பெற விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரிசி அட்டைதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் குடும்ப தலைவி உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்ற திட்டம் விரைவில் தொடங்கப்படும் என தகவல்கள் வெளியானதால் புதிய ரேஷன் கார்டிற்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. நிலைமையை சரி செய்ய ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக இருந்தது. இதனால் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்கள் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்தியாவில் வேலையின்மை விகிதம் – ஜூன் மாதத்தில் 9.19% குறைவு!
அதனால் தமிழக அரசு சார்பில் கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக கடந்த மே மாதம் அனைத்து ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.2000 நிவாரணம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் மீதமுள்ள ரூ.2000 ஜூன் மாத தவணையாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் அதனுடன் 14 மளிகை பொருள்கள் அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதிகளில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக குடும்ப தலைவி உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த திட்டம் செல்லுபடியாகும் என தகவல்கள் பரவுகிறது. இதனால் புதிதாக ரேஷன் கார்டு கோரி விண்ணப்பம் செய்வோரின் எண்ணிக்கை தமிழகம் முழுவதும் கணிசமாக அதிகரித்துள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ளவர்கள் தனியாக ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
மேலும் அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் ரேஷன் அட்டை மூலமாக மட்டுமே வழங்கப்படுகிறது. எனவே குடும்ப அட்டைக்கு விண்ணப்பம் செய்யாதவர்கள் தற்போது இணையதளம் வாயிலாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பித்து வருகின்றனர். குடும்ப அட்டை பெற விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.