தமிழகத்தில் மின் கணக்கீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் – மின்துறை அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் மின் கணக்கீடுகளை செய்வதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் முறை கொண்டுவரப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார்.
ஸ்மார்ட் மீட்டர்
தமிழகத்தில் தற்போது ஆட்சியமைத்துள்ளதான திமுக அரசு பல நலத்திட்ட உதவிகளை அளித்து வருகிறது. அந்த வகையில் மின்சார அளவீடுகளை பொருத்தளவு, கொரோனா பரவல் காரணமாக கடந்த மாதம் உள்ள கணக்கீடுகளையே பயன்படுத்தும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தவிர தமிழகம் முழுவதும் அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுவதால், அதற்கான நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியல் இனத்தவர்களுக்கு தாட்கோ திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு !!
இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மேலும் வீடுகள் தோறும் மின் கணக்கீடுகளை செய்வதற்கு தற்போது வரை டிஜிட்டல் மீட்டர் முறை செயல்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக ஸ்மார்ட் மீட்டர் முறை பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
அதாவது தமிழக மின்வாரியத்தில் ஏற்பட்டுள்ள ரூ.900 கோடி இழப்பை சரி செய்வதற்காகவும், இப்படிப்பட்ட இழப்புகள் ஏற்படாமல் இருக்கும் வகையில் ஸ்மார்ட் மீட்டர் முறை அமல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். தவிர கடந்த ஆட்சி காலத்தின் போது சுமார் 9 மாதம் வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் தற்போது இப்பணிகள் 10 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில்பாலாஜி குறிப்பிட்டுள்ளார்.