பட்டியல் இனத்தவர்களுக்கு தாட்கோ திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு !!
தமிழகத்தில் தாட்கோ மூலம் பட்டியல் இனத்தவர்களுக்கு வழங்கப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
தாட்கோ திட்டம்:
தமிழகத்தில் பட்டியல் இன மக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டு குறிப்பிட்ட சதவீத இட ஒதுக்கீடுகளை வழங்குகிறது. மேலும் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவிகளையும் அளிக்கிறது. பட்டியல் இன மக்களுக்கு தாட்கோ நிறுவனம் மூலம் பல்வேறு நலத்திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பட்டியல் இன மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு பொருளாதார மேம்பாட்டு திட்டங்களை வங்கிக் கடன் உதவியுடன் தாட்கோ நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி? வெளியான முக்கிய தகவல்!
தற்போது தாட்கோ மூலம் பட்டியல் இனத்தவர்களுக்கு செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களான நிலம் வாங்கும் திட்டம், நில திட்டம், மின் இணைப்பு திட்டம், தொழில் முனைவோர் திட்டம், சுய வேலைவாய்ப்பு திட்டம் போன்றவற்றிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். https://application.tahdco.com/ என்ற இணையதள பக்கத்தில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் கூடுதல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தாட்கோ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
புகைப்படம், இருப்பிடச் சான்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் எண், குடும்ப வருமான சான்றிதழ் எண், கைபேசி எண் போன்றவைகளை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும், விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில் மட்டும் பதிவு செய்யலாம். விண்ணப்பத்தின் விலை ரூ.60 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன் ஒப்புகை ரசீது விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.