தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி? முதல்வரிடம் கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பதற்கு எந்தவித தளர்வுகளும் வழங்கப்படாததால் தியேட்டர் உரிமையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
ஊரடங்கு தளர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் விளைவாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனால் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. அதன் காரணமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரத்தில் இருந்து 6 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனால் முழு ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்திற்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் – அரசு அறிவிப்பு!
இதன்படி, கொரோனா பரவல் குறைவாக உள்ள 23 மாவட்டங்களில் பேருந்து பொதுப் போக்குவரத்துக்கு ஜூன் 28 முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் வகை 3ல் உள்ள சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளன. தனியார் மற்றும் அரசு அலுவலகங்கள் 100 சதவிகித பணியாளர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
வணிக வளாகங்கள், மால்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளை கொரோனா கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி திறக்க அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அறிவித்த ஊரடங்கு தளர்வுகளில் திரையரங்குகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்பவில்லை. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதால் திரையரங்குகளை திறப்பது குறித்து முதல்வரிடம் நேரடியாக கோரிக்கை வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.