மாநிலத்திற்குள் நுழைய கொரோனா நெகட்டிவ் சான்று கட்டாயம் – அரசு அறிவிப்பு!
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்திற்குள் வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்று வைத்திருக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
கர்நாடகா மாநிலத்தில் பொது முடக்கம் அமல்படுத்தியதன் விளைவாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தற்போது கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவ தொடங்கியுள்ளது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் பெங்களூரு மற்றும் மைசூர் ஆகிய பகுதியில் தலா ஒருவருக்கு டெல்டா பிளஸ் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
Instagram பயனர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – புதிய அம்சம் அறிமுகம்!
இதனால் மாநிலத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா ஆதிக்கம் செலுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாநில முதல்வர் எடியூரப்பா அவர்கள் சுகாதாரத்துறை வல்லுனர்களுடன் முக்கிய ஆலோசனை ஒன்றை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் ஓர் முக்கிய அறிக்கை ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி இதர குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து கர்நாடகா மாநிலத்திற்குள் வருபவர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில எல்லையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநிலத்தில் டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பரவுவதை தடுக்க இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.