ஊரடங்கு வாபஸ், இயல்பு நிலைக்கு திரும்பிய மாநிலம் – பொதுமக்கள் நிம்மதி!
தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று முதல் மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
ஊரடங்கு நீக்கம்:
நாடு முழுவதும் கொரோனா பரவல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், தெலுங்கானா மாநிலங்களில் தொற்று பரவல் அதிகமாக இருந்தன. இந்நிலையில் அந்த மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.
ஓய்வூதிய காலத்துக்கான புதிய பாலிசி – LIC அறிமுகம்!
இதன் காரணமாக கொரோனா பரவல் குறைந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா பரவல் 1 சதவிகிதமாக பதிவாகி வரும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்க மருத்துவக்குழு பரிந்துரை செய்தது. அதன்படி நேற்று (ஜூன் 20 ) முதல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்க அரசு அனுமதி வழங்கியது. இதனால் நேற்று மக்கள் இயல்பு வாழ்க்கை திரும்பியது.
TN Job “FB Group” Join Now
மக்கள் எந்தவித அச்சமும் இன்றி தங்களது அன்றாட வேலைகளை செய்தனர். மேலும் அனைத்து கல்வி நிறுவனங்களும் ஜூலை 1 முதல் திறக்க அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தெலுங்கானாவில் இதுவரை 6.12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,556 பேர் உயிரிழந்துள்ளனர்.