63.5% பேருக்கு கொரோனா எதிர்ப்பு திறன் – செரோ சர்வே தகவல்!!
உலக சுகாதார நிறுவனமும், டெல்லி எய்ம்ஸ் நிர்வாகமும் இணைந்து நடத்திய கொரோனா செரோ ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்டோர்களில் 55.7 % நபர்களுக்கு கொரோனா எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
செரோ சர்வே:
இந்தியாவில் கோவிட் பரவல் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் தொடர்பாக நாடு முழுவதும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் செரோ சர்வே எனப்படும் ஆய்வு நடைபெறுகிறது. கோவிட் பரவலை மதிப்பிடுவதற்காகவும் மக்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு திறனை மதிப்பிடுவதற்க்காகவும் இந்த ஆய்வு நடத்தப்பட உள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. இந்த கொரோனா செரோ ஆய்வில் 18 வயது மேற்பட்டோர்களில் 55.7 % நபர்களுக்கு கொரோனா எதிர்ப்பு திறன் உருவாகியுள்ளதாக எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் ஆலோசனை!!
இந்த செரோ ஆய்வை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என எய்ம்ஸ் இயக்குனர் கூறியுள்ளார். மேலும் செரோ ஆய்வு நேர்மறையான தகவல்களை தந்துள்ளது. இந்த ஆய்வு நாட்டின் அனைத்து பகுதிகளிளும் நடக்கும் எனவும் உறுதியளித்துள்ளார். கொரோனா அறிகுறி குழந்தைகளுக்கு தென்படுவதில்லை. கொரோனா தொற்றிலிருந்து மீண்ட ஊரக மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள 18 வயதுக்கு குறைவான 80% பேருக்கு உடலில் ஆன்டிபாடி உருவாகியுள்ளது என மருத்துவர் குலோரி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சராசரியாக 63.5% பேருக்கு கொரோனா எதிர்ப்பு திறன் உருவாகி உள்ளது தெரிய வந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றை எதிர்க்கும் திறன் உருவாகியுள்ளது. செரோ பரிசோதனையின் மூலம் மனிதனின் இயல்பான நோய் எதிர்ப்பு சக்தியினை அளவிட முடியும். மேலும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி புரதங்களான ஆன்டிபாடிகள் எனப்படும் இம்யூனோ குளோபுலின் ஜி எந்த அளவுக்கு உடம்பில் உள்ளது என்பதை கண்டறிய செரோ ஆய்வில் இரத்தத்திலுள்ள சீரத்தை பிரித்து பரிசோதனை செய்யப்படுகிறது.