தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கை – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான ஆணையம் ஆலோசனை!!
தமிழகத்தில் தொழிற்படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் இன்று தனது முதல் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
அரசு ஆணையம்:
தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டில் அரசுப்பள்ளி மாணவர்களின் சேர்க்கை அரசுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில்,மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால் பல தரப்பு மக்களிடம் இருந்தும் புகார்கள் எழுந்தது.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் பெண் ஆட்சித் தலைவர்கள் – வரலாற்று சிறப்பு!
அதனால் தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி முருகன் தலைமையில், கால்நடைத்துறை, வேளாண்துறை, மீன்வளம், சட்டத்துறை, அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர், தொழில்நுட்பக் கல்வித்துறை இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உள்ளிட்ட 9 பேர் குழு கொண்ட ஒன்றை அமைத்தார். அரசின் இந்த குழு மாணவர்களின் சமூக பொருளாதாரம், அவர்களின் பிரச்சனைகள் குறித்து கண்டறிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களின் பொருளாதார நிலைமையினால் அவர்களால் தொழிற்கல்விகளான பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற படிப்புகளில் சேர முடியவில்லை என்றால் அதனை எவ்வாறு சரி செய்வது என்பதை ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த ஆணையத்தின் முதல் ஆலோசனைக்கூட்டம் இன்று சென்னை கிண்டி தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சேர்க்கையை அதிகரிப்பது குறித்தும், மருத்துவப்படிப்பிற்கு அளிக்கப்பட்டது போல் தொழிற்படிப்புகளுக்கும் இட ஒதுக்கீடு வழங்குவது போன்றவை குறித்து ஆலோசிக்க உள்ளனர். இந்த ஆணையம் தங்களது அறிக்கையை ஒரு மாதத்திற்குள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.