தமிழகத்தில் மூன்று மணி நேர மின்வெட்டு – மின்சாரத்துறை அமைச்சர் தகவல்!!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் ஜூன் 19ம் தேதி முதல் தொடங்க இருப்பதால், குறிப்பிட்ட பகுதிகளில் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு மின்வெட்டு ஏற்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
பராமரிப்பு பணிகள்:
தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மின்பராமரிப்பு பணிகள் ஏதும் நடக்காமல் உள்ளது. இதனால், பழுதடைந்த மின் கம்பங்கள், சாய்ந்த மின் கம்பங்கள், மின் கம்ப தாங்கு கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், பலவீனமான பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் மரக்கிளைகள் அகற்றம் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. இவற்றை 10 நாட்களுக்குள் செய்து முடிக்க தமிழக முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
ஓட்டுநர் உரிமம் செல்லுபடி காலம் செப்.,30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!
இதனால் மொத்த மின்வாரியத்தின் இயந்திரங்களும் பகுதியாக பிரிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் ஜூன் 19ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணிகள் தொடர்பான விவரங்கள் மாவட்ட வாரியாக தயாரிக்கப்பட்டு மின்வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்படும். பராமரிப்பு பணிகள் நடக்கும் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு மின்தடை செய்யப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மின்கட்டணம் தொடர்பாக தமிழக அரசு மூன்று விதமான தேர்வுகளை மக்களுக்கு அளித்தது. ஒன்று கடந்த 2019 மே மாத மின்கட்டணம் அல்லது, கடந்த மாதத்திற்கான மின்கட்டணம் அல்லது மின் மீட்டரின் அளவை குறித்து அதிகாரிகளுக்கு புகைப்படம் அனுப்பினால் அவர்கள் அதற்கான கட்டணத்தை கணக்கிட்டு மின்கட்டணத்தை அனுப்பி வைப்பார்கள். மொத்தம் 10,03,777 நுகர்வோர் மின்கட்டணம் தொடர்பாக புகார் அளித்திருந்த நிலையில் அவர்களில் 10 லட்சம் பேரின் புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.