ஓட்டுநர் உரிமம் செல்லுபடி காலம் செப்.,30 வரை நீட்டிப்பு – மத்திய அரசு அறிவிப்பு!
2020 பிப்ரவரி முதல் காலாவதியாக இருந்த ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன உரிமை ஆவணம் போன்றவற்றின் செல்லுபடியாகும் காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது:
அவகாசம் நீட்டிப்பு:
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாட்டில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய துறைகளை தவிர அரசின் மற்ற துறைகள் செயல்படவில்லை. இதனால் நாட்டில் நடக்க இருந்த பல முக்கிய நிகழ்வுகள் மற்றும் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது.
நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவன காலிப்பணியிடங்கள் – UGC உத்தரவு!
அதேபோல், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருந்து வந்த காரணத்தால் ஓட்டுநர் உரிமம், ஆர்சி, பிட்ன்ஸ் சர்டிபிகேட் போன்ற மோட்டார் வாகனங்கள் தேவையான அனைத்து ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை 2020 பிப்ரவரி முதல் நீட்டித்துள்ளது. இறுதியாக ஜூன் 30ம் தேதி வரை இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் முன்னதாக அறிவித்தது.
TN Job “FB Group” Join Now
தற்போது இது தொடர்பாக மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் காரணமாக ஓட்டுநர் உரிமம், பதிவு சான்றிதழ் (ஆர்.சி), பிட்னஸ் சான்றிதழ் உள்ளிட்ட பிற மோட்டார் வாகன ஆவணங்கள் அனைத்தும் செப்டம்பர் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என்று அறிவித்துள்ளது. நாட்டின் ஒரு சில மாநிலங்களில் புதிய ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விட்ட நிலையிலும், பழைய ஆவணங்களை புதுப்பிக்கும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.