தமிழகத்தில் தொழில் கல்வி படிப்புகள் சேர்க்கை – ஆய்வு மையம் அமைக்க உத்தரவு !!
தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தொழிற்கல்வி படிப்புகள் :
தமிழகத்தில் இளநிலை மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது இதன் மூலம் 400 மாணவர்கள் பயன் அடைந்தனர். பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன் வளம் மற்றும் சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர்கள் சேர்க்கை மிக குறைவாக உள்ளது என பல கல்லூரிகளில் இருந்து மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
TN Job “FB Group” Join Now
மேலும் மருத்துவ படிப்பிற்கு வழங்கியது போல பொறியியல் உள்ளிட்ட படிப்புகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. தனியார் கல்லூரிகளில் தொழிற்படிப்பு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை வழங்கப்படுகின்றனர்.
தொழில் மேம்பாடு நிதியாக சிறப்பு கடன் – திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!!
இதற்கு காரணமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பொருளாதார நிலை, அதனால் அவர்கள் சந்திக்கக்கூடிய இடர்பாடுகள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் தெரிவிக்கப்படுகிறது.அதனால் தொழில் கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களின் சேர்க்கை அளவை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இந்த ஆணையம், தனது பரிந்துரை அறிக்கையை ஒரு மாதத்துக்குள் அரசுக்கு அளிக்க உத்தரவிட்டுள்ளது.