தமிழக அரசின் நல்லாசிரியர் விருது – கல்விதுறை ஆலோசனை!!
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு மாநில அரசின் நல்லாசிரியர் விருது வழங்குவது குறித்து கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது.
நல்லாசிரியர் விருது:
தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறந்த ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாசிரியர் விருது வழங்கப்படும். சமீபத்தில் மத்திய அரசு தேசிய நல்லாசிரியர் விருது பெற தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தது. அதில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆசிரியர் தினத்தன்று டெல்லியில் விருது பெறுவர். அதே போல் தமிழகத்திலும் நல்லாசிரியர் விருது வழங்குவது குறித்து கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் ஜூன் 21க்கு மேல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் இது குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆசிரியர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் பெறப்படவில்லை. கடந்த வருடம் முதல் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அதனால் இந்த வருடம் தமிழகத்தில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. ஒரு வேளை விருது வழங்கப்பட்டால் நிதி செலவை குறைத்து ஆசிரியர்களுக்கு சான்றிதழ் மட்டும் வழங்குவது குறித்தும் கலந்தாலோசனை நடைபெறுகிறது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
தற்போது உள்ள சூழ்நிலையில் பொருளாதார நெருக்கடி நிலை நிலவுவதால் நல்லாசிரியர் விருதுக்கு ஆகும் செலவு பரிசுத் தொகை போன்ற செலவுகளை அரசு குறைக்க முற்படுகிறது. விருது வழங்கினால் கல்வி தொலைக்காட்சியில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் விருது வழங்கி அவர்களை ஊக்குவிக்கலாம் என்றும் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இணையவழி வகுப்பு அதனை சார்ந்த பயிற்சி,கொரோனா பரவலில் சமூக பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள்,கற்றல் மேம்பட கட்டகம் வகுக்கும் குழுவில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்குவதில் முன்னுரிமை வழங்கலாம்