தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

0
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு - வானிலை அறிக்கை!!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!

தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

வானிலை நிலவரம்:

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழையும், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

17.06.2021 அன்று நீலகிரி, கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழையும், எஞ்சிய மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும், சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 18.06.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மகளிர் சுய உதவிக்குழு கடன் தவணைகளை செலுத்த கால அவகாசம் – கலெக்டர் உத்தரவு!

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். 19.06.2021, 20.06.2021 அன்று கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஓட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சி 14 செமீ, பெரியாறு, சின்னக்கல்லார், வால்பாறை தலா 11 செமீ, சின்கோனா 7 செமீ, எமெரால்ட் 6 செமீ, சோலையாறு 5 செமீ, பாபநாசம், தேக்கடி தலா 4 செமீ, பேச்சிப்பாறை 2 செமீ, தென்காசி 1 செமீ மழை பதிவாகியுள்ளது.

Windows 10 பயனர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு – மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியீடு!

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

வங்கக்கடல் பகுதிகள்:

16.06.2021 மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. 16.07.2021, 17.06.2021 மத்திய வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே குறிப்பிட்ட தேதிகளில் இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 17.06.2021 அன்று மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த கற்று மணிக்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்திற்கு தடை? நீதிமன்றம் மறுப்பு!

அரபிக்கடல் பகுதிகள்:

16.06.2021 முதல் 18.06.2021 வரை கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 16.06.2021 முதல் 20.06.2021 வரை தென் மேற்கு, மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 16.06.2021 முதல் 19.06.2021 வரை மகாராஷ்டிரா மற்றும் கோவா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!