தமிழகத்தில் ஜூன் 21க்கு மேல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
தமிழகத்தில் ஜூன் 21 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கானது மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வுகள் கொடுக்கப்படுமா? என பொது மக்களிடையே பலத்த எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
கொரோனா 2 ஆம் பேரலை எதிரொலியாக தமிழகத்தில் கடந்த மே மாதம் 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தினால் கடந்த 2 வாரங்களுக்கு முன்னாக பதிவான கொரோனா பாதிப்பானது, தற்போது 12 ஆயிரமாக வீழ்ச்சியடைந்துள்ளது. அதன் படி தமிழகம் கொரோனா பாதிப்பில் இருந்து படிப்படியாக மீண்டு வருகிறது என்பது தெளிவாக தெரிகிறது.
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு – வானிலை அறிக்கை!!
இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 21 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், இந்த கட்டுப்பாடுகள் மேலும் நீட்டிக்கப்படுமா என மக்களிடையே பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கத்தில் அத்தியாவசிய கடைகளான காய்கறி, மளிகை கடைகள், தேநீர் கடைகள், சலூன் கடைகள், மதுபான கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் இந்த சேவைகள் மீண்டுமாக செயல்பட்டாலும் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதால் சிறு, குறு தொழில்கள் பெரும் பாதிப்படைந்துள்ளது. எனவே தமிழகத்தில் ஜூன் 21 க்கு மேல் தளர்வுகள் அளிக்கப்பட்டால், பேருந்து போக்குவரத்து சேவைகளை மீண்டுமாக துவங்க வேண்டும் என்பது பலரது வேண்டுகோளாக உள்ளது. இது தவிர மதவழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசிக்க அனுமதி கொடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக்குழு கடன் தவணைகளை செலுத்த கால அவகாசம் – கலெக்டர் உத்தரவு!
தவிர ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளாக மாவட்டங்களுக்கு இடையே நிறுத்தி வைக்கப்பட்டதான போக்குவரத்துக்கு மீண்டும் அனுமதி கிடைக்கலாம் எனவும் இ-பதிவில் கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. எனினும் மாநிலம் முழுவதும் இந்த வாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, மக்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகும் என தகவல்கள் கிடைத்துள்ளது.